பின்னர், எம்எல்ஏ பாலாஜி கூறுகையில், இந்த பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், தற்போது சேதம் அடைந்துள்ளதால் அதை கட்டிய ஒப்பந்ததாரர், பணியில் இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன். இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் கவனத்திற்கு ெகாண்டு செல்லப்பட்டு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும். அதுவரை தனியாருக்கு சொந்தமான தற்காலிக கட்டிடத்தில் பள்ளி செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சிறுதாவூர் ஊராட்சி தலைவர் வேதா அருள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளியை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.