இந்நிலையில், விசாரணைக்கு கூப்பிட்டதால் நேற்று காலை அச்சமடைந்த ராஜேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை அவரது சகோதரர் நரேந்திரகுமார் மற்றும் அவரது பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ராஜேஷ் சகோதரர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திற்க்கு விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.