வீடு புகுந்து 5 சவரன் திருடிய பெண் கைது

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன் (55). இவரது வீட்டில் வைத்திருந்த 5 சவரன் நகை, கடந்த 6ம் தேதி திருடுபோனது. இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரு பெண் பத்மநாதன் வீட்டிற்குள் செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி (49) என்பதும், விருகம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

The post வீடு புகுந்து 5 சவரன் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: