உரத்த குரலில் கத்திதான் சொல்ல வேண்டும் என்றோ, ஆபாசமான வார்த்தைகளால் சொல்ல வேண்டும் என்றோ கிடையாது. சட்டப்படி செய்ய வேண்டியதை நாம் செய்யத்தான் போகிறோம். போலீசார் அனைவரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கையாகவும், அறிவுறுத்தலாகவும் கூறுகிறேன். தேவையற்ற வார்த்தைகளை பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தேவையில்லாமல் பேசக்கூடிய (ஷார்ட் டெம்பர்) போலீசார் குறித்த விவரங்களை அதிகாரிகள் மூலம் கேட்டுள்ளோம். அதுபோன்ற போலீசாரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதனையும் மீறி தேவையற்ற வார்த்தைகளை பேசினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தற்போது நடந்துள்ள சம்பவமே உதாரணம். இவ்வாறு கமிஷனர் பேசியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
The post ‘‘ஒரு சிலரின் தவறுகளால் காவல்துறைக்கு களங்கம்’’ போலீசார் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்: மதுரை கமிஷனர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.