மானூர் அருகே இரும்பு தகடுகளை திருடிய இருவர் கைது

மானூர்,ஆக.9: மானூர் அருகே பாலம் கட்டுமான பணிக்கு வைக்கப்பட்டிருந்த இரும்புத்தகடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். சுரண்டையை சேர்ந்த ஒப்பந்ததாரர் சுரேஷ் (45). இவர் மானூர் அருகே கட்டாரங்குளம் சாலையில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கான்கிரீட் போடுவதற்கு அங்கு வைத்திருந்த இரும்பு தகடுகள் திருடு போனதாக மானூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடக்கு வாகைக்குளத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரிமுத்து (38), பெரியசாமி மகன் சேகர் (42) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிம் இரும்பு தகட்டிற்கான ரூ.10ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

The post மானூர் அருகே இரும்பு தகடுகளை திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: