பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை திடீரென சிறப்பு முகாமில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது முகாம் முழுவதும் சுற்றி பார்த்ததுடன் கைதிகள் தப்பிக்க முயற்சி ஏதும் செய்துள்ளனரா, ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா என தீவிர சோதனை நடந்தது. இதில் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய இந்த சோதனை 2 மணி நேரம் நீடித்தது. பின்னர் 8 மணியளவில் முகாம் சிறையிலிருந்து போலீசார் புறப்பட்டு சென்றனர்.
The post கைதிகள் தப்பிக்க முயற்சியா? திருச்சி முகாம் சிறையில் 100 போலீசார் திடீர் ரெய்டு: செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.