நண்பரை தாக்கிய 3 பேர் கைது

மதுரை. ஆக. 8: மதுரை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர்(40). இவர் தனது நண்பர்களுடன் அண்ணா பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் பிரபாகரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய ஆழ்வார்புரம் செல்வம்(42), முத்துக்குமார் (38), புளியந்தோப்பு ஆசைத்தம்பி (34) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான ராமர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post நண்பரை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: