காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் நுவாகோட்டில் விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

நேபாளம்: நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள ஷிவ்புரி பகுதியில் ஏர் டைனஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டுவில் இருந்து பிற்பகலில் ஹெலிகாப்டர் புறப்பட்டது, ஹெலிகாப்டர் புறப்பட்டபோது அதில் நான்கு சீன பிரஜைகள் மற்றும் விமானி உட்பட மொத்தம் 5 பேர் இருந்தனர். புறப்பட்ட மூன்று நிமிடங்களில், அது தொடர்பை இழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசுவாவில் உள்ள சியாஃப்ரூபேசிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு தொடர்பை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் Saurya Airlines விமானம் விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் விபத்தில் உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்தனர். விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததாக நுவாகோட்டில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன் மலையில் மோதியதாகவும் தலைமை எஸ்பி சாந்திராஜ் கொய்ராலா கபர்ஹபுக்கு தெரிவித்தார்.

The post காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் நுவாகோட்டில் விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: