×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க டிடிவி வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை மாநகரில் எந்தவித ஒருங்கிணைப்புமின்றியும் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DTV ,Northeast Monsoon ,CHENNAI ,AAMUK ,General ,Dinakaran ,Tamil Nadu ,Meteorological Center ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...