லாரி டிரைவர் மாயம்

தர்மபுரி, ஆக.3: தர்மபுரி அடுத்த கோபிநாதம்பட்டி புதுகொக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், லாரி டிரைவர். இவர் வாடகைக்கு லாரி எடுத்து ஓட்டி வருகிறார். கடந்த 5ம் தேதி, லாரியை எடுத்து சென்ற மாரியப்பன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காததால், இதுபற்றி அவரது உறவினர்கள், கோபிநாதம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி டிரைவர் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: