இணையவழி கழிவு பரிமாற்றத் தளம் அமைத்தல், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் தொடர்பான பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகாரம் பெற வேண்டும், அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களிலும் நுண்ணுயிரியல் பகுப்பாய்வகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காற்று தர அடிப்படையிலான கண்காணிப்பிற்காக கருவிகளை தமிழ்நாடு உணர்திறன் முழுவதும் அமைப்பதற்கான முன்மொழிவினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்க வேண்டும். மண் பகுப்பாய்வு முறைகள் தொடர்பாக வாரியத்தின் அனைத்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளுக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மூலமாக பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post 14 கடற்கரை மாவட்டங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்காமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.