நாளை ஆடிப்பெருக்கு பதிவு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்


சென்னை: ஆடிப்பெருக்கை ஒட்டி பதிவு அலுவலகங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: அசையா சொத்து குறித்த ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாளில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவார்கள் என்பதால் பொது விடுமுறை நாளான 3ம் தேதி (சனிக்கிழமை) அன்று ஆடிப்பெருக்கு நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நாளை ஆடிப்பெருக்கு பதிவு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் appeared first on Dinakaran.

Related Stories: