கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (59) கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதாக தெரியவருகிறது. மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கை எடுக்கப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கிறது. இந்த சம்பவத்தை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமி குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு 10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி 10 லட்சத்துக்ிகான காசோலையை மீனவர் மலைச்சாமியின் குடும்பத்தினரிடம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில், எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினார்.

The post கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: