தார் சாலை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

 

பல்லடம், ஜூலை 31: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் கண்டியன் கோவில் ஊராட்சியில் பழுதுபட்ட 10க்கும் மேற்பட்ட சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் தார் சாலை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அவினாசிபாளையம் முதல் காங்கயம் செல்லும் நெடுஞ்சாலையில் கருணைபாளையம் பிரிவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், துணை செயலாளர்கள் மோகன், ரவி பொங்கலுர் ஒன்றிய செயலாளர் தங்கவேல், துணை செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய கவுன்சலர் ஜோதிபாசு மற்றும் நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, சின்னசாமி, குப்புசாமி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விரைவாக சாலை அமைத்து தருகிறோம் என்கிற உத்திரவாத கடிதத்தை வழங்கியதை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

The post தார் சாலை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: