விஷம் அருந்தி காவலாளி தற்கொலை

சின்னமனூர், ஜூலை 31: சின்னமனூர் அருகே விஷம் அருந்தி காவலாளி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னமனூர் அருகே தேனி ஒன்றியத்திலுள்ள சீலையம்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குருசாமி (78). தனியார் கடையில் இரவு காவலாளி வேலை செய்து வந்தார். இவர், உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post விஷம் அருந்தி காவலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: