அரசு பள்ளி விழா மேடை திறப்பு

 

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த நல்லம்பக்கம் ஊராட்சிக்குட்பட்ட கண்டிகையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட நவீன கழிப்பறைகள் மற்றும் விழா மேடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், பள்ளி தலைமையாசிரியர் அனுசுயா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் இசைகலா, பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அகஸ்தாகிறிஸ்டி நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

The post அரசு பள்ளி விழா மேடை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: