×

வயநாடு நிலச்சரிவு: தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு

டெல்லி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. நிலச்சரிவு தொடர்பாக சூமோட்டோ வழக்கு பதிவு செய்து விரைவில் பட்டியலிட பதிவாளருக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு உத்தரவிட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் குறித்த விபரங்களைத் தயார் செய்ய கேரள அரசுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

The post வயநாடு நிலச்சரிவு: தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Wayanad Landslide ,National Green Tribunal ,Delhi ,South Zone National Green Tribunal ,Wayanad ,Pushpa Satyanarayana ,
× RELATED விநாயகர் சிலை கரைக்க கட்டணம் சட்ட நடைமுறை தேவை