×

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. கலிங்கப்பட்டினத்துக்கு 310 கிமீ கிழக்கு, ஒடிசாவின் கோபால்பூருக்கு 260 கிமீ கிழக்கு-தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுமண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். ஆந்திராவில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

அதேபோல், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வலுவான தரைக்காற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

The post வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Indian Meteorological Survey Centre ,Delhi ,Central West ,Northwest Bengal Sea ,North Bank ,North Odisha ,Kalingapattinam ,Gopalpur, Odisha ,Meteorological ,
× RELATED காற்றழுத்த தாழ்வு பகுதி...