அஞ்சுகிராமம் ஜாண்ஸ் பள்ளியில் பூக்கள் தின கொண்டாட்டம்

 

அஞ்சுகிராமம், ஜூலை 29: அஞ்சுகிராமம், ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில் மழலையர்களுக்கான பூக்கள் தினம் கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் ஜெ. ஜெபில் வில்சன் தலைமை தாங்கினார். முதல்வர் ஷெரின் சந்திர லீலா முன்னிலை வகித்தார்.

மாணவர்கள் பூக்களை ஆடையாக அணிந்து, ராஜாக்களாகவும், ராணிகளாகவும் வலம் வந்து, பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும் மாணவர்கள் பலவித மலர்களால் பல்வேறு பொருட்களைச் செய்து மகிழ்ந்தனர். விழாவிற்கு ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர். ஜெ. ஜேன் தீப ஜெயா வானதி, மற்றும் சுகந்தா டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

The post அஞ்சுகிராமம் ஜாண்ஸ் பள்ளியில் பூக்கள் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: