மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்ட ஆட்சியர்களுக்கு செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 83,000 கனஅடி நீர் நாளைக்குள் மேட்டூர் அணை வந்தடையும் என கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: