சென்னை: கார்கில் வெற்றி தினத்தின் வெள்ளிவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள போர் நினைவுச்சின்னத்தில் ஆளுநர் மரியாதை செலுத்தி வருகிறார். தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினட் ஜெனரல் கரன்பிர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.