என்றோ ஒரு ஏதோவொரு தருணத்தில் தங்களிடம் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்குமாறு இரவு முழுவதும் எனது மனதில் ஒரு உணர்வு இருந்ததாகவும், அதனால் தான் நீங்கள் இருக்கும் இடத்தை தேடி விசாரித்து இந்த அதிகாலை நேரத்தில் வந்திருப்பதாகவும் கூறி, தகப்பனின் கரங்களை பிடித்து ரூபாய் நோட்டுகளை திணித்துச் சென்றார்.முழங்காலில் கண்ணீர் மல்க ஜெபித்தவரின் கண்ணீர் காயும் முன்பாக தேவன் தமது சார்பில் ஒருவரை அனுப்பி தேவைகளை பூர்த்தி செய்ததுடன் மீதமும் எடுக்கவைத்தார். இரவில் கண்ணீருடன் ஜெபத்தை ஆரம்பித்தவர் அதிகாலையில் நன்றியுடன் தேவனை பணிந்து, மனைவி மற்றும் பச்சிளங்குழந்தையுடன் சந்தோஷமாக வீடு திரும்பினார்.இறைமக்களே, இறைவேதம் தேவனுக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று ‘‘ஜெபத்தைக் கேட்கிறவர்’’ (சங்.65.2) என்பதாகும். மேலும் அவர் ‘‘திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்’’ (சங்.102:16) என்றும் இறைவேதம் எடுத்துரைக்கிறது. நமது இயலாமைகளை, பெலவீனங்களை, தேவைகளை எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதர்களால் புரிந்துகொள்வது சாத்தியமல்ல, ஆகவே தீர்வை இறைவனிடம் மட்டுமே நாட வேண்டும். பாரபட்சம் பாராத இறைவன் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பது நிச்சயமே!‘‘அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்’’ (சங்.91:15) என்பது இறைவன் நமக்கருளும் வாக்குறுதியாகும்.
– அருள்முனைவர் பெவிஸ்டன்.
The post பிரார்த்தனைகளுக்கு பதில் உண்டு appeared first on Dinakaran.