கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மேலும் ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் ஏற்கனவே 2 நாட்கள் காவலில் எடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது. 2 நாள் காவல் முடிந்த பின் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி ஆஜர்படுத்தியது. 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்கப்பட்ட நிலையில் ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
The post ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரை மேலும் ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி appeared first on Dinakaran.