அதனால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் தொடக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தொடர் போராட்டத்தை நடத்துவது என தீர்மானம் கொண்டு வந்து போராட்டம் நடக்கிறது.
இதற்கிடையே, புதியதாக பொறுப்பேற்றுள்ள பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி, டிட்டோ ஜாக் அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தார். அதன்பேரில் இயக்குநர் கண்ணப்பன், டிட்டோஜாக் அமைப்பில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை ஆறுதலாக இருந்தது. இது தொடர்பாக அரசாணை வராத நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, 29, 30 மற்றும் 31ம் தேதிகளில் டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
The post ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம்: டிட்டோஜாக் அறிவிப்பு appeared first on Dinakaran.