மருத்துவமனை சார்பில் வழங்கும் சாப்பாடை சாப்பிட மாட்டோம், அந்த சாப்பாடு தரமாக இல்லை, எங்களுக்கு வெளியில் இருந்து கொண்டு வரும் சாப்பாடை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. அதைத் தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்கள் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீங்கள் முறைப்படி ஜெயில் அதிகாரியிடம் அனுமதி வாங்கினால் வெளி உணவை சாப்பிட அனுமதிக்கிறோம் என்று கூறினர். அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உணவை சாப்பிட்டனர்.
The post வெளி உணவை சாப்பிட அனுமதிக்க கோரி ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.