கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்க வாலிபர் கைது

 

ஊட்டி, ஜூலை 21: ஊட்டி அலங்கார் தியேட்டர் அருகில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சந்தேகத்திற்குரிய ஒரு வட மாநில வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது அவரிடம் விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது. விசாரணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரோமன் தமங் (40) என்பதும், தற்போது ஊட்டியில் உள்ள வால்சம் ரோடு பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்க வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: