×

எஸ்எஸ்ஐ திடீர் மரணம்

சூளகிரி, ஜூலை 21: திருப்பத்தூரை சேர்ந்தவர் ரவிக்குமார் (56). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸ் ஸ்டேஷனில், சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு அவர் உயிரிழந்தார். இறந்த ரவிக்குமாருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ரவிக்குமார் கடந்த 30 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார். அவரது உடலுக்கு நேற்று போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

The post எஸ்எஸ்ஐ திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : SSI ,Choolagiri ,Ravikumar ,Tiruppattur ,Chulagiri Police Station, Krishnagiri District ,Hosur Government Hospital ,
× RELATED காரில் மதுபாட்டில் கடத்தியவர் கைது