நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக் கவிழ்ந்து இருவர் பலி

நெல்லை: தென்காசி மாவட்டம் புளியங்குடி, முத்துராமலிங்கம் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (53). இவரது மைத்துனர் முகம்மது திவான்(38). இருவரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தனர். சாகுலுக்கு கண்ணில் பாதிப்பு இருந்ததால் சரி செய்வதற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நெல்லையில் உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சாகுல் ஹமீது, திவானுடன் நேற்று அதிகாலை பைக்கில் புறப்பட்டார். பைக்கை சாகுல் ஓட்டினார். நெல்லையை அடுத்த ராமையன்பட்டி சிவாஜி நகர் அருகே சென்றபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் நிலைதடுமாறி பைக் கவிழ்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

The post நாய் குறுக்கே பாய்ந்ததால் பைக் கவிழ்ந்து இருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: