மீண்டும் அவருடன் தகாத உறவை தொடர வேண்டும் என்று கூறி வற்புறுத்தியுள்ளார். இதனை மீனா ஏற்க மறுத்ததால் ரவிச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவிச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மீனாவின் கையில் குத்தினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனா வலியால் அலறித்துடித்தார். அப்போது, பொதுமக்கள் திரண்டு வருவதைக் கண்ட ரவிச்சந்திரன் அதே கத்தியால் தனது வயிற்றில் குத்திக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதையடுத்து, படுகாயமடைந்த ரவிச்சந்திரனை மீட்ட பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post முறை தவறிய உறவை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு சித்தப்பா தற்கொலை appeared first on Dinakaran.