கொல்லங்கோடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்

நித்திரவிளை, ஜூலை 20 ; கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை பகுதியை சேர்ந்தவர் வினோத்(25). மீன்பிடி தொழிலாளி. அவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஜீவாவுக்கும் கடந்த மாதம் மோதல் ஏற்பட்டு காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தையில் முடிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று வினோத் மார்த்தாண்டன்துறை பள்ளி அருகே செல்லும் போது ஜீவாவின் தந்தை சேவியர், அண்ணன் ஜினு, உறவினர் ஜினோ ஆகியோர் சேர்ந்து முகத்தில் இடி கட்டையால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த வினோத் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் சேவியர், ஜினு, ஜினோ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கொல்லங்கோடு அருகே தொழிலாளி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: