ராஜபாளையம் டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனை துவக்கம்

 

ராஜபாளையம், ஜூலை 18: ராஜபாளையம் மீனாட்சி தியேட்டர் அருகில் உள்ள டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனை கோலாகலமாக தொடங்கியது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் கலந்து கொண்டு ஆடி தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு தெற்கு நகர் கழக செயலாளர்கள் பேங்க் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா மற்றும் காங்கிரஸ் நகர செயலாளர் சங்கர் கணேஷ், டகர் சம்சுதீன் துணைவியார் ஷமீதாபீவி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். டைகர் பர்னிச்சர் உரிமையாளர் சம்சுதீன் கூறுகையில், இங்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 50 சதவீத தள்ளுபடி உண்மையான பாதி விலையில் ஆடி மாதம் முழுவதும் பொருள்களை தருகிறோம். இந்த மிகச் சிறந்த அரிய சந்தர்ப்பத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

The post ராஜபாளையம் டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: