மதுரை ரயில்வே சந்திப்பில் பெண்களுக்கு காத்திருப்பு அறை

மதுரை, ஜூலை 18: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை : மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியின் 2வது நுழைவாயிலில் உள்ள ஐஆர்சிடிசி எக்சிகியூட்டிவ் லவுஞ்ச் அருகே பெண்களுக்கான பிரத்யேகமான காத்திருப்பு மண்டபம் இப்போது இயங்குகிறது. ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, பிரதான நிலையக் கட்டிடம் கட்டுவதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட தற்காலிக வசதி இது. பெண்கள் காத்திருப்பு கூடம் முன்பு ஸ்டேஷனின் பிரதான நுழைவு (கிழக்கு) பக்கத்திற்கு அருகில் செயல்பட்டு வந்தது. அங்கு ரயில் நிலையத்தின் மறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காத்திருப்பு கூடத்தில் 68.7 சதுர மீட்டர் இடம், நாற்காலிகள், போதுமான விளக்குகள், மின்விசிறிகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், ஓய்வு அறைகள் (இந்திய மற்றும் மேற்கத்திய பாணி), மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வு அறை வசதி, ஒரு குளியலறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை ரயில்வே சந்திப்பில் பெண்களுக்கு காத்திருப்பு அறை appeared first on Dinakaran.

Related Stories: