நாகர்கோவிலில் அதிக மாத்திரை தின்று முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

நாகர்கோவில், ஜூலை 17: தூத்துக்குடி நம்மாழ்வார் தெருவை சேர்ந்தவர் ராஜி(52). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி தனலெட்சுமி(45). ராஜி கோணம் மாவட்ட தொழில் மையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். அவர் குடும்பத்துடன் நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜி, அதிக மாத்திரைகளை எடுத்து தின்றுள்ளார். இதில் சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ராஜி இறந்தார். இது குறித்து அவரது மனைவி தனலெட்சுமி கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவிலில் அதிக மாத்திரை தின்று முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: