குறிப்பாக சென்னையில் மட்டுமல்லாது திருவண்ணாமலை, ராமநாதபுரம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் நடிகை கவுதமி மூலம் புகார் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சென்னை காவல் ஆணையரிடத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேரளாவில் பதுங்கி இருந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்படை போலீசார் சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அழகப்பன் நிபந்தனை ஜாமின் பெற்று விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட்டு வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் 2 வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் போடப்பட்டிருந்தது. குறிப்பாக கோட்டையூர் பகுதியில் இருக்கும் நிலத்திலும் அதே நேரத்தில் நடிகை கவுதமியின் சகோதரர் ஸ்ரீகாந்த் நிலத்தையும் அழகப்பன் மற்றும் பலராமன், சுகுமாரன் உள்ளிட்டோர் சேர்ந்து அபகரித்ததாக கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த 2 வழக்குகளில் தற்போது அழகப்பனை மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நடிகை கவுதமி, அவரது சகோதரர் சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் அழகப்பன் மீண்டும் கைது..!! appeared first on Dinakaran.