கூடலூர் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


நீலகிரி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூடலூர் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை; ஓடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. தரைப் பாலம் மூழ்கியதால் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி, மாயார் செல்ல முடியாமல் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாவநல்லா உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

The post கூடலூர் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Related Stories: