கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

 

சிவகங்கை, ஜூலை 16: சிவகங்கையில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா வரவேற்றார். இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சாத்தையா பேரவை கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொருளாளர் முருகன் கலந்து கொண்டார்.

மாவட்டத் தலைவராக ராஜா, மாவட்ட செயலாளராக சிவசாமி, மாவட்ட பொருளாளராக மனோகரன் மற்றும் அமைப்பு குழு உறுப்பினர்களாக சண்முகசுந்தரம், வேலாயுதம், பால்பாண்டி தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் மீனாசேதுராமன், உள்ளாட்சி சம்மேளன மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சகாயம், காளைலிங்கம், கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: