நத்தம் செந்துறையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம்

நத்தம், ஜூலை 16: நத்தம் அருகே செந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு துவங்கி 3 மணி வரை நடக்கும் இம்முகாமில் ஊரகம், வருவாய், மின்சாரம், வேளாண்மை, கல்வி, வனம் உள்பட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளன. இதில் நத்தம் ஊரக பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம். மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்தி தீர்வு பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை துறை சார்ந்த அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

The post நத்தம் செந்துறையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: