‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு’

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை ஒன்றிய அரசு கண்டு கொள்வதில்லை. சீனா- பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடைபெறும் போது, ஒன்றிய அரசு கண்டன அறிக்கை வெளியிடுகிறது. ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் ஒன்றிய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு’ appeared first on Dinakaran.

Related Stories: