வீரன் அழகுமுத்துக்கோன் 267வது குருபூஜை விழா

ஊத்தங்கரை, ஜூலை 12: ஊத்தங்கரையில் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 267வது குருபூஜை விழா, யாதவ இளைஞர் பண்பாட்டு சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யாதவ இளைஞர் பண்பாட்டு சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக யாதவ மகாசபை மாவட்ட தலைவர் ரவி, தொழிலதிபர் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ், பிரகாஷ், அனுமந்த ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, அழகுமுத்துக்கோன் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நெல்லி செடிகள், இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் யாதவ மகாசபை செயலாளர் மணிவண்ணன், சதீஷ்குமார், நிர்வாக அமைப்பு செயலாளர் கவியரசன், மோகன், வாசு, தம்பிதுரை, செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post வீரன் அழகுமுத்துக்கோன் 267வது குருபூஜை விழா appeared first on Dinakaran.

Related Stories: