மேட்டுப்பாளையம், ஜூலை 9: கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. நேற்றைய முன்தினம் நிலவரப்படி பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குந்தாவில் 3 மிமீ, அவலாஞ்சி பகுதியில் 18 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மேலும், கேரள மாநில பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு 8.10 மணி நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 90.50 அடி. அணைக்கு வினாடிக்கு 994 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக பில்லூர் அணை 90 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தொடர் மழை எதிரொலி 90 அடியை எட்டிய பில்லூர் அணை நீர்மட்டம் appeared first on Dinakaran.