பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

பல்லடம், ஜூலை 8: பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி ஊராட்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம், விசைத்தறி கூடம், கறிக்கோழி பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடைபெற்று வருகின்றன. பணிக்கம்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இல்லை.

இதனால் விவசாயிகளுக்கான உரங்கள், மருந்து பொருட்கள், உள்ளிட்டவை வெளிமார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வங்கி சம்பந்தமான பணிகளுக்கும் விவசாயிகள் பல்லடம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு பட்ஜெட்டில் கிராமங்கள் தோறும் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே எங்கள் கிராமத்துக்கு முன்னுரிமை அளித்து கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: