கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம்

 

சிவகங்கை, ஜூலை 8: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: துணிவு மற்றும் வீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவாக தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: