நாகனேந்தல் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 8: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர்கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நாகனேந்தல், காவனூர் செல்லும் சாலை சிதலமடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவனூர் ஊராட்சியில் உள்ள நாகனேந்தல் மற்றும் காவனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு உப்பூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து மேற்கண்ட கிராமங்களுக்கு செல்வதற்கான சாலை உள்ளது.

இந்த சாலையில் சுமார் 2 கி.மீ தூரம் வரையிலும் குண்டும் குழியுமான சாலை சிதலமடைந்துள்ளது இதனால் சைக்கிள், பைக் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம், மேடு தெரியாமல் டூவீலர்களில் செல்பவர்கள் கீழே தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன்கருதி இந்த சாலையை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நாகனேந்தல் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: