புகையிலை விற்றவர் கைது

மதுரை, ஜூலை 7: மதுரை, கோரிப்பாளையம் சாவடி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(44). இவரது பள்ளிவாசல் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு கம்பெனிகள் தயாரித்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 4.50 கிலோ இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் ராஜ்குமாரை கைது செய்தனர்.

The post புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: