இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர். விடிய, விடிய நடந்த இந்த சோதனையின் போது உதவி பொறியாளர் மோகன்பாபுவிடமிருந்து ரூ.58 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், லஞ்சம் கொடுப்பதற்காக ஒப்பந்ததாரர்கள் கொண்டு வந்திருந்த ரூ.10 லட்சத்து 40 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உதவி செயற்பொறியாளர் மோகன் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
எல்லையில் ரெய்டு: தமிழக எல்லைப்பகுதியான ஜூஜூவாடியில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலையில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இச்சோதனையில், அங்கிருந்த கணக்கில் வராத ரூ.2,25,950 லட்சம் சிக்கியது. இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஈரோடு கலெக்டர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.10.40 லட்சம் ரொக்கம் பறிமுதல்; உதவி செயற்பொறியாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.