மார்த்தாண்டம் அருகே விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்

மார்த்தாண்டம், ஜூலை 5: மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு நுள்ளிவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜோஸ் (46). லாரி டிரைவர். அவரது மனைவி அனிதா (41). நேற்று முன்தினம் மதியம் ஜஸ்டின் ஜோஸ் தனது பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து பயணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பயணம் பகுதி அருகே தனியார் பள்ளி முன்பு வந்தபோது எதிரே உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்த விஜு (45) என்பவர் ஓட்டிவந்த பைக் ஜஸ்டின் ஜோஸ் ஓட்டிவந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஜஸ்டின் ஜோஸ் படுகாயமடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஜஸ்டின் ஜோசின் மனைவி அனிதா அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் அருகே விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: