செம்மண் கடத்திய கும்பல்: பொக்லைன் பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அரசு இடத்தில் செம்மண் கடத்திய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் பொய்கால் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் லாரிகளில் செம்மண் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் செம்மண் கடத்தப்பட்ட லாரியுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து, அஞ்சூர் விஏஓ மகேஷ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபியை பறிமுதல் செய்தனர். மேலும், செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post செம்மண் கடத்திய கும்பல்: பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: