செங்கல்பட்டு அருகே டூவிலரில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே டூவிலரில் சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் அழகு கலை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் தனது வேலையை முடித்துக்கொண்டு இளம்பெண் டூவிலரில் வீட்டிற்கு சென்றார். சென்னேரி என்ற இடத்தில் சென்றபோது டூவிலரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதுகுறித்து இளம்பெண் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post செங்கல்பட்டு அருகே டூவிலரில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Related Stories: