எலிக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி மூதாட்டி பலி: ஒருவர் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே எலிக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கிய மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார். மின்வெளி அமைத்தவரை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அருகே குப்பையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கங்கன். இவரது மனைவி அன்னம்மாள் (62). இவர், நேற்று முன்தினம் இரவு குப்பையநல்லூர் அருகே உள்ள நீரடி கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு வயல்வெளி வழியாக சென்றுள்ளார்.

அப்போது, ஆனந்தன் என்பவர் தனது நிலத்தில் எலிக்காக வைக்கப்பட்ட மின் வெளியில் அன்னம்மாள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், மின்சாரம் தாக்கி அன்னம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உத்திரமேரூர் போலீசார், அன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எலிக்காக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி மூதாட்டி பலி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: