தெற்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், அக்.23: சேலம் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் தெற்கு மின் கோட்டத்தில், மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர்நகர் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் திருநாவுகரசு பங்கேற்று குறைகளை கேட்டறிகிறார். அதனால், சேலம் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை செயற்ெபாறியாளர் அன்பரசன்
தெரிவித்துள்ளார்.

The post தெற்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: